» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதி மொழி!

வியாழன் 11, ஆகஸ்ட் 2022 5:04:11 PM (IST)



நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது..
  
தூத்துக்குடி–நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத்திலுள்ள மர்காசிஸ் நகரில் இயங்கி வரும்  ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை தாங்கினார். கல்லூரி பர்சார் தனபால் முன்னிலை வகித்தார். 

ஆட்டோமொ பைல் துறைத் தலைவர் ஜாண் வெஸ்லி தமிழக அரசின் போதை ஒழிப்பு உறுதி மொழியை வாசித் தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவி யர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடுகளை கல்லூ ரியின் தாளாளர் மற்றும் திருமண்டல செயற்குழு உறுப்பினர் ஜான்சன் டேவிட், முதல்வர் கோயில் ராஜ் ஞானதாசன் மற்றும்  கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ் உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர் ஆகியோர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory