» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதி மொழி!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 5:04:11 PM (IST)
நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது..
தூத்துக்குடி–நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத்திலுள்ள மர்காசிஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை தாங்கினார். கல்லூரி பர்சார் தனபால் முன்னிலை வகித்தார்.
ஆட்டோமொ பைல் துறைத் தலைவர் ஜாண் வெஸ்லி தமிழக அரசின் போதை ஒழிப்பு உறுதி மொழியை வாசித் தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவி யர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடுகளை கல்லூ ரியின் தாளாளர் மற்றும் திருமண்டல செயற்குழு உறுப்பினர் ஜான்சன் டேவிட், முதல்வர் கோயில் ராஜ் ஞானதாசன் மற்றும் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ் உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர் ஆகியோர் செய்திருந்தனர்.