» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
ஏபிசி மகாலட்சுமி கல்லூரி சார்பில் வீடுதோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி
புதன் 10, ஆகஸ்ட் 2022 8:18:06 AM (IST)
தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி நாட்டுநல பணித்திட்டம் சார்பில் வீடுதோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி ஏபிசி மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணி திட்ட அணியான 47 மற்றும் 57 பிரிவினர் சார்பில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் பகுதியாக வீடுதோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நேற்று தாளமுத்துநகரில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை நாட்டுநல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் சண்முகப்பிரியா மற்றும் பேராசிரியர் வசந்தசேனா ஆகியோர் செய்திருந்தனர். நாட்டுநலப்பணிதிட்டத்தின் செயலாளர் சந்தியா தாளமுத்துநகர் மற்றும் சுனாமி காலனி பகுதிகளில் வீடுதோறும் தேசிய கொடியினை வழங்கினார். இந்நிகழ்வில் தாளமுத்துநகர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வமணி உடன் இருந்தார்.