» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி மகளிர் விடுதியில் ஜெனரேட்டர் திறப்பு விழா!
வியாழன் 4, ஆகஸ்ட் 2022 4:36:06 PM (IST)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியின் மகளிர் விடுதியில் ஜெனரேட்டர் திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியின் மகளிர் விடுதியில் ஜெனரேட்டர் திறப்பு விழா நடந்தது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஆல்பர்ட் தலைமை வகித்து ஜெபித்து ஜெனரேட்டரை திறந்து வைத்தார். உதவிகுரு ஜெபஸ்டின் வேதபாடம் வாசித்தார். முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன் வாழ்த்தி பேசினார். கல்லூரி தாளாளர் டாக்டர் கமலிஜெயசீலன், முதல்வர் சோபியா செல்வராணி, உதவி முதல்வர் ஐரின் நிஷானி மற்றும் விடுதி காப்பாளர்கள், அலுவலக ஊழியர்கள கலந்து கொண்டனர்.