» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மண்டல அளவிலான என்.சி.சி. பயிற்சி முகாம்: ஸ்ரீ கணேசர் பள்ளி மாணவர் தகுதி!

சனி 28, மே 2022 12:05:16 PM (IST)



மண்டல அளவிலான என்.சி.சி. பயிற்சி முகாமில் பங்கேற்க பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளி மாணவர் தகுதி பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளி தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் 30 பேர் மதுரை என்.சி. அகாடமியில் நடந்த மாவட்ட அளவிலான ஆண்டு இறுதி பயிற்சி முகாமில் 10 நாட்கள் பயிற்சி பெற்றனர். அதில் 9ம் வகுப்பு மாணவன் ஹரிம் மாதவன் சிறந்த கேடட்டாக தேர்வு பெற்று மண்டல அளவிலான இறுதி பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

மேலும் ஹரிம் மாதவன், பால்ரேனியஸ் ஆகிய இரு மாணவர்களும் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவர்களையும் பள்ளி செயலாளர் செல்வம், தலைவர் பிரபாகரன், பொருளாளர் விஜய சேகர், நிர்வாக அலுவலர் சுரேஷ் காமராஜ், தலைமையாசிரியர் வித்யாதரன், ஆசிரியர்கள், ஊர் பொது மக்கள் ஆகியோர் பாராட்டினர். தலைவர் மற்றும் செயலாளர் இருவரும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory