» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மர்காஷிஸ் கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு
வெள்ளி 8, ஏப்ரல் 2022 5:03:23 PM (IST)
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்முகத் தேர்வில் 132 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மற்றும் சென்னை புளூ ஓசோன் பர்சனல் அலைடு சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கான வளாக நேர்முகத்தேர்வு நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் டாக்டர் அருள்ராஜ் பொன்னுதுரை துவக்கி வைத்து தலைமை உரை ஆற்றினார்.
முகாமில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி, சாயர்புரம் கல்லூரி மற்றும் காயல்பட்டணம் வாவு வஷிகா கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மாணவிகள் 85 பேர் உட்பட மொத்தம் 132 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.
முகாமில் கல்லூரி துணை முதல்வர் ஜெயராஜ் பெரியநாயகம் ஜெயராஜ் அன்னபாக்கியம் தேசிய பொறியியல் கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி செயலாளர் எஸ்டிகே ராஜன் மற்றும் முதல்வர் அருள்ராஜ் பொன்னுத்துரை தலைமையில் வாழ்க்கை வழிகாட்டுதல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாய் ஷோபினி, ஆரோக்கிய அமுதன், ஞானசுமதி மற்றும் கல்லூரி அலுவலர்கள் செய்திருந்தனர்.