» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
திங்கள் 28, பிப்ரவரி 2022 12:06:34 PM (IST)
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார மகளிர் திட்டம் மற்றும் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி சார்பில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. சென்னையிலுள்ள பிரபலமான புளு ஓசின் என்ற தகவல்தொழில்நுட்ப நிறுவனம் தான் வேலைவாய்ப்புக்கான தேர்வுகள் மற்றும் நேர்காணலை நடத்தியது.
சுமார் 75க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர். இதில் 52 பெண்களுக்கு பணிநியமன ஆணையை கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியை கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன் வழிகாட்டுதலின்படி கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் பேராசிரியர் ஜான் தினகர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.