» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
முத்துநகர் கடற்கரையில் மீன்வளக் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணி
ஞாயிறு 26, செப்டம்பர் 2021 8:51:56 AM (IST)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை மீன்வளக் கல்லூரி மாணவ-மாணவிகள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கடலில் ஏற்படும் மாசுகள் 80 சதவீதம் நிலத்தில் வாழும் மக்களால் ஏற்படுகின்றன. ஒரு ஆண்டில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் வந்து சேர்வதால் மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஆண்டுக்கு ஒரு மில்லியன் கடற்பறவைகள் மற்றும் ஒரு லட்சம் கடல் வாழ் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கடல் பகுதியில் தேவையற்ற குப்பைகளை கொட்ட கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கடந்த ஒரு வார காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சர்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் கீழ் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மீன்வளக் கல்லூரி மாணவ- மாணவிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் சாந்தகுமார் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன் தொடங்கி வைத்தார். பின்னர் கடலோரப் பகுதி தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சென்றவர்களிடம் மாணவ-மாணவிகள் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் மே தினவிழா : முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
செவ்வாய் 3, மே 2022 3:10:18 PM (IST)

சாத்தான்குளம் பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்
திங்கள் 25, ஏப்ரல் 2022 12:06:50 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு
வெள்ளி 8, ஏப்ரல் 2022 5:03:23 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்!
வெள்ளி 8, ஏப்ரல் 2022 3:55:44 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம்
புதன் 23, மார்ச் 2022 3:53:47 PM (IST)

தூத்துக்குடியில் மாநில செஸ் போட்டி: ஏப். 2ல் துவக்கம்
புதன் 23, மார்ச் 2022 8:29:59 AM (IST)
