» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மழைநீர் சேமிப்புத் திட்டப் பணிகள்!
புதன் 22, செப்டம்பர் 2021 4:12:25 PM (IST)
தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரியில் மழைநீர் சேமிப்பு மிகவும் சிறப்பாகவும் பயனுள்ள விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தில் மொத்தம் 16 இடங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை காலத்திற்கு முன் மழைநீரை அதிகமான சேமிக்கும் பொருட்டு அனைத்து தொட்டிகளையும் தூய்மைப்படுத்தி, தூர்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் கல்லூரி செயலர் அருட்சகோதரி ப்ளோரா மேரி, முதல்வர் அருட்சகோதரி லூசியா ரோஸ், அவர்களின் வழிகாட்டலின் பேரில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் அனைத்தும் எம் கல்லூரியில் பின்பற்றப்பட்டுள்ளன. தூர்வாரும் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் எம் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அணிகள் 66,67,129,130 திட்ட அலுவலர்களின் மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளன.