» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூய மரியன்னை கல்லூரி சார்பில் மகளிருக்கு பயிற்சி!
வியாழன் 19, ஆகஸ்ட் 2021 11:12:39 AM (IST)
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பில் மகளிருக்கான சுயதொழில் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) தூத்துக்குடி , உன்னத் பாரத் அபியான் மற்றும் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப்புற மகளிர் பொருளாதார சுதந்திரம் அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் பழையகாயல் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு சுயதொழில் மேம்பாட்டிற்காக தையல் கலை பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை ராஜாத்தி, ஒருங்கிணைத்து ஏப்ரல் மாதம் 12 தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 தேதி வரை பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சியின் நிறைவு விழாவில் பயிற்சிபெற்ற 40பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பழையகாயல் தூய பரிபூரண அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை அமலன் அவர்கள் முன்னிலையில் E-Kids International உரிமையாளர் ஃபிரடி பெர்னான்டோ தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி குழந்தை தெரெஸ் வாழ்த்துரை வழங்கினார். தூய மரியன்னை கல்லூரி வணிகவியல் துறை இணை பேராசிரியை டெய்ஸிபாய் மற்றும் துணை பேராசிரியை சோனி ஆகியோர் இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
[email protected]Aug 19, 2021 - 09:27:51 PM | Posted IP 173.2*****