» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

செபி நிறுவனத்தில் ரூ.44,500 சம்பளத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

சனி 15, ஜூன் 2024 4:44:44 PM (IST)

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான (செபி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான (செபி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Securities and Exchange Board of India

மொத்த காலியிடங்கள்: 97

பணி: Officer Grade A (AM) – General Streams– 62

தகுதி: சட்டம், பொறியியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம், முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Officer Grade A (AM) – Legal – 5

தகுதி: சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer Grade A (AM) – IT – 24

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அம்பிளிகேசன் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer Grade A (AM) – Electrical – 2

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer Grade A (AM) – Research – 2

தகுதி: பொருளாதாரம், வணிகம், வணிக நிர்வாகவியல், நிதி பொருளாதாரம், பொருளாதார அளவியல்,

கணிதப் பொருளாதாரம், விவசாயப் பொருளாதாரம், வணிகப் பொருளாதாரம், தொழில்துறை பொருளாதாரம், வணிகப் பகுப்பாய்வு, புள்ளியியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை, முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Officer Grade A (AM) – Official Language – 2

தகுதி: ஹிந்தி மற்றும் ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ரூ.44,500 சம்பளத்தில் செபி நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
ஆண்டுக்கு ரூ.36 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா?
சம்பளம்: மாதம் ரூ.44,500 - 89,150

வயதுவரம்பு: 31.3.2024 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: முதல் கட்டத் தேர்வு மையம் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், விருதுநகர், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோவில், கன்னியாககுமரி, ஈரோடு ஆகிய நகரங்களில் நடைபெறும்.

இரண்டாம் கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை மற்றும் மதுரை.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.100, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.1000. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://www.sebi.gov.in என்ற இணையதளத்தின் மூம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.6.2024


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory