» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

அஞ்சல் துறையில் 38,926 காலிப் பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு

திங்கள் 9, மே 2022 11:58:33 AM (IST)

அஞ்சல் துறையில் தற்போது புதிதாக 38,926 காலியிடங்களுக்கான மாபெரும் வேலைவய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் டாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களுக்கானது. தமிழ்நாட்டில் மட்டும் 4310 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருந்த இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையவும். 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Gramin Dak Servaks
மொத்த காலியிடங்கள்: 38,926
பணியிடம்: இந்தியா முழுவதும்

அஞ்சல் மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. ஆந்திரம் - 1716
2.  அசாம் - 951
3. அசாம் பெங்காலி/ பங்களா -143
4. அசாம் போடோ - 47
5. அசாம் ஹிந்தி/ ஆங்கிலம் - 2
5. பிகார் - 990
6. சத்தீஸ்கர் - 1253
7. தில்லி - 60
8. குஜராத் - 1901
9. ஹரியானா - 921
10. ஹிமாச்சல பிரதேசம் - 1007
11. ஜம்முகாஷ்மிர் - 265
12. ஜார்கண்ட்  - 610
13. கர்நாடக - 2410
14. கேரம் - 2203
15. மத்தியப் பிரதேசம் - 4074
16. மகாராஷ்டிரம் கொங்கனி / மராத்தி - 42
17. மகாராஷ்டிரம் மராத்தி - 2984
18. வடகிழக்கு பெங்காலி -166
19. வடகிழக்கு இந்தி/ ஆங்கிலம் - 236
20. வடகிழக்கு மணிப்பூரி/ ஆங்கிலம் - 56
21. வடகிழக்கு மிசோ - 93
22. ஒடிசா - 3066
23. பஞ்சாபி ஆங்கிலம் - 21
24. பஞ்சாபி - 948
25. ராஜஸ்தான் - 2390
26. தமிழ்நாடு - 4310
27. தெலங்கானா - 1226
28. உத்தரப் பிரதேசம் - 2519
29. உத்தரகாண்ட் -  353
30. மேற்கு வங்காளம் பெங்காலி -1850
31. மேற்கு வங்காளம் ஹிந்தி/ ஆங்கிலம் - 48
32. மேற்கு வங்காளம் நேபாளி - 26
33. மேற்கு வங்காளம் நேபாளி / பெங்காலி - 13
34. மேற்கு வங்காளம் நேபாளி / ஆங்கிலம் - 26

தகுதி: மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட மாநிலங்களின் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். 

மேலும் இருசக்கர வாகனங்கள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விகிதங்களின்படி தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in, indianpostgdsonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:  பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.06.2022

மேலும் விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


மக்கள் கருத்து

Mareeswariமே 11, 2022 - 09:32:11 AM | Posted IP 162.1*****

Nalla pathivu

Nivethitha. Sமே 10, 2022 - 06:27:15 AM | Posted IP 162.1*****

More easier

Mareeswariமே 9, 2022 - 02:36:55 PM | Posted IP 162.1*****

Job

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory