» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள்

திங்கள் 30, ஜனவரி 2023 3:24:51 PM (IST)



தூத்துக்குடியில் ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் கூடைப்பந்து பெற்றோர் சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜிம்கானா கிளப்பில் நடைபெற்றது. 

இதில் முதல் இடத்தை பத்து வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி ஏ அணியும், இரண்டாம் இடத்தை செயிண்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியும் பெற்றன. 12 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் அணியில் முதலிடத்தை அல்வேர்னியா பள்ளி, கோவையும், 2ம் இடத்தை ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியும், 3வது இடத்தை லேடி சிவசாமி சென்னை அணியும் 4வது இடத்தை செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி அணிகளும் பிடித்தன. 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதல் இடத்தை செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாவது இடத்தை தூத்துக்குடி விகாசா பள்ளியும் பெற்றன. 

பரிசளிப்பு விழாவில் ஹோலி கிராஸ் தலைமை பயிற்சியாளர் எப். ரவி, ஜி.பி. ஜோ பிரகாஷ், தொழிலதிபர், சகோ. லசால் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்பால், ராஜா ஏஜென்சிஸ் மேலாளர் மோகன், அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் சூர்ய கலா, மாவட்ட கூடைப்பந்து சங்கத் தலைவர் பிரேமானந்தன், மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் பாலமுருகன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் முதல்வர் பாத்திமா, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியைகள் சோபியா, சுஜிதா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory