» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தென் மண்டல கராத்தே போட்டியில் சாதனை: தூத்துக்குடி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
செவ்வாய் 28, செப்டம்பர் 2021 10:32:25 AM (IST)
தென் மண்டல அளவிலான கராத்தே போட்டியில பதக்கங்களை வென்ற தூத்துக்குடி மாணவர்களை ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டினார்.
தென் மண்டல அளவிலான கராத்தே போட்டி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வைத்து நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜு ரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் செயல்பட்டார்..
இப்போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில் 15 தங்கப் பதக்கத்தையும் 9 வெள்ளிப் பதக்கத்தையும் 9 வெண்கலப் பதக்கத்தையும் வென்று மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தனர் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் சோபுக்காய் கோஜு ரியு கராத்தே பள்ளியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சென்சாய் செந்தில் மாவட்ட துணை தலைவர் பாலாஜி மாவட்ட செயலாளர் சென்சாய் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்