» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பாராலிம்பிக் டேபிள் டென்னிசில்: அரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றி
சனி 28, ஆகஸ்ட் 2021 12:40:23 PM (IST)
டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பாவின படேல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் அரை இறுதிப்போட்டியில் 34 வயதாகும் இந்தியாவின் பாவினா பட்டேல் சீனாவின் மியாவோ ஜாங்கை எதிர்த்து ஆடினார். மொத்தம் 34 நிமிடங்கள் அரை இறுதிப் போட்டிக்கான ஆட்டங்கள் நடந்தன. மொத்தம் நடந்த 5 ஆட்டங்களில் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் சீனாவின் யிங் ஜூ-வை எதிர்த்து ஆமதாபாத்தைச் சேர்ந்தபவினா பட்டேல் விளையாட இருக்கிறார். இறுதிப்போட்டி ஆட்டங்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.