» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கால்பந்து போட்டி: கோவில்பட்டி அணி முதலிடம்
புதன் 25, ஆகஸ்ட் 2021 8:29:26 AM (IST)
கோவில்பட்டியில் நடைபெற்ற வட்டார கால்பந்து போட்டியில் ஸ்பாட்டன் அணி முதலிடம் பெற்றது.
கோவில்பட்டி கால்பந்து கழகம் சாா்பில் ஆா்.பி.சண்முகையா பாண்டியனாா் நினைவு ஐவா் கால்பந்து போட்டி நடைபெற்றது. 14 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கோவில்பட்டி ஸ்பாட்டன் கால்பந்து கழக அணி, கோவில்பட்டி கால்பந்து கழக அணியும் விளையாடின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பாட்டன் அணி முதலிடம் பெற்றது. பசும்பொன் அணி 3-ஆம் இடம்பெற்றது.
பின்னா், நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கால்பந்து கழகச் செயலா் தேன்ராஜா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சந்தோஷ், உறுப்பினா் விக்கி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், முதலிடம் பெற்ற ஸ்பாட்டன் அணிக்கு கால்பந்து கழக துணைத் தலைவா் சீதாலட்சுமி கேடயம் வழங்கினாா். 2 மற்றும் 3 ஆம் இடம்பெற்ற அணிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.