» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஹிந்தி பேசத் தெரியாமல் ஏற்பட்ட அனுபவம்: அஸ்வின்

புதன் 9, ஜூன் 2021 5:26:12 PM (IST)

தமிழ்நாட்டுக்கு வெளியே ஹிந்தி தெரியாவிட்டால் தண்ணீரிலிருந்து வெளியே வந்த மீனின் நிலைமைதான் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் அஸ்வின், தனது யூடியூப் சேனலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பேட்டியை வெளியிட்டுள்ளார். அப்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படம் பற்றி அஸ்வின் கூறியதாவது: ஹிந்தி தெரியாமல் ஏற்படும் அனுபவத்தை தேசிய கிரிக்கெட் அகாதெமியிலும் (என்சிஏ) இந்திய அணியிலும் நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்துள்ளேன். ஹிந்தி எழுதிப் படிக்கத் தெரியும். பேச வராது. நம்மூரில் பேசிப் பழக்கம் இல்லை. தமிழ்நாட்டைத் தாண்டி வெளியே செல்லும்போது, ஹிந்தி தெரியாவிட்டால் தண்ணீரிலிருந்து வெளியே வந்த மீனின் நிலைமைதான். 

இதை கனா படத்தில் வித்தியாசமாக மாற்றியிருந்தார்கள். தமிழ் தெரியாதது பலவீனம், இருவருக்குத் தமிழ் தெரிந்தால் அதைப் பலமாக மாற்றலாம் என்பதை ஸ்டம்பிங் செய்து காண்பித்திருப்பார் சிவகார்த்திகேயன். எனக்கு அந்தக் காட்சி மிகவும் பிடித்தது. கனா படம் பார்க்கும்போது பெரிய குறைகள் தெரியவில்லை. படக்குழுவினர் எப்போதும் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். கனா படத்துக்காக நான் பயிற்சியளிப்பதாக இருந்தது. சிவகார்த்திகேயன் என்னிடம் கேட்டிருந்தார். ஆனால் நான் பயணத்தில் இருந்ததால் முடியாமல் போய்விட்டது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory