» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல அனுமதி

செவ்வாய் 1, ஜூன் 2021 4:37:05 PM (IST)



இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி ஜூன் 3 அன்று இங்கிலாந்துக்குச் செல்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. 

அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது. இங்கிலாந்தில் 4 மாதங்கள் தங்கவேண்டியிருப்பதால் குடும்பத்தினரும் இங்கிலாந்து வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என வீரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வீரர்களின் கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 

இதனால் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் தற்போது இங்கிலாந்து செல்லவுள்ளார்கள்.   இந்திய ஆடவர், மகளிர் அணியினர் ஒன்றாகச் சேர்ந்து தனி விமானத்தில் இங்கிலாந்துக்குச் செல்கிறார்கள். எனினும் மகளிர் அணியினர் குறுகிய காலம் மட்டுமே இங்கிலாந்தில் இருப்பதால் அவர்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லப் போவதில்லை என்று அறியப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory