» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்து பயணம்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தல் நாட்கள் 24 ஆக அதிகரிப்பு!!

புதன் 19, மே 2021 12:41:23 PM (IST)

இங்கிலாந்து பயணத்தையொட்டி இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்தும் நாட்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் மும்பையில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. அங்கு முதலில் ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறதிப்போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கும் இ்ந்திய அணி, அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
 
இங்கிலாந்து பயணத்தையொட்டி இந்திய அணி வீரர்கள் 18 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி முதலில் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த தனிமைப்படுத்தும் நாட்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் திட்டமிடலின்படி, மும்பையில் உள்ள ஓட்டலில் இந்திய வீரர்கள் இன்று தனிமைப்படுத்துதலை தொடங்குகிறார்கள். 

அதே சமயம் மும்பையில் வசிக்கும் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே, மூத்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோருக்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் வருகிற 24-ந்தேதி தான் ஓட்டலில் கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இணைய உள்ளனர். ஆனால் முந்தைய 5 நாட்களும் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்துதலை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளும் இங்கிலாந்தில் விளையாட இருப்பதால் அவர்களும் மும்பையிலேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். 

வீரர்களுடன் குடும்பத்தினரும் உடன் இருக்க அனுமதிக்கப் படுகிறார்கள். கொரோனா பாதிப்பில் மீண்டுவிட்ட இந்திய மூத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் சில தினங்களில் மும்பை வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை ஓட்டலில் 2 வாரங்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்ததும் இந்திய வீரர்கள் அதன் பிறகு தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்படுகிறார்கள். அங்கு சென்றதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்கும் சவுத்தம்டனில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அங்கு தனிமைப்படுத்தலின் போது கட்டுப்பாடுகளுடன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்படும். முன்னதாக இங்கிலாந்து கிளப்புவதற்கு முன்பாக இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் நெகட்டிவ் முடிவு வர வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory