» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மலிங்காவை விடுவித்தது ஏன்? மும்பை இந்தியன்ஸ் விளக்கம்
வியாழன் 21, ஜனவரி 2021 12:08:44 PM (IST)
ஐபிஎல் 2021 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துள்ள 18 வீரர்களின் பட்டியலில் மலிங்கா இடம்பெறவில்லை

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008 முதல் 12 வருடங்களாக மும்பை அணிக்காக விளையாடியவர் மலிங்கா. ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவரும் மலிங்கா தான். 122 ஆட்டங்களில் 170 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 7.14. இதையடுத்து இதற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: லீக் போட்டிகளில் இருந்து மலிங்கா விலகியுள்ளார். இந்த மாதத் தொடக்கத்தில் மலிங்கா இத்தகவலைத் தெரிவித்தார். இதனால் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் இருந்து அவர் விலகினார். மலிங்காவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். இதனால் தான் மும்பை அணி தக்கவைத்துள்ள 18 வீரர்களின் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
குடும்பத்தினருடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளேன். கரோனா அச்சுறுத்தல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் என்னால் லீக் போட்டிகளில் பங்கேற்க முடியாது. எனவே தான் ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறேன். 12 வருடங்களாக எனக்கு ஆதரவு அளித்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துக்கு நன்றி என்று ஓர் அறிக்கையில் மலிங்கா கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது: போட்டி அட்டவணை வெளியீடு
திங்கள் 8, மார்ச் 2021 8:26:55 AM (IST)

ஐ.சி.சி. தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
ஞாயிறு 7, மார்ச் 2021 9:05:08 AM (IST)

அஸ்வினுக்கு 8-வது முறையாக தொடர்நாயகன் விருது
ஞாயிறு 7, மார்ச் 2021 9:00:00 AM (IST)

அஸ்வின், அக்ஷர் மீண்டும் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!!
சனி 6, மார்ச் 2021 4:06:40 PM (IST)

வீரர்களுக்கு கரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு
வெள்ளி 5, மார்ச் 2021 12:00:34 PM (IST)

ஐ.பி.எல். பயிற்சி முகாம்: தோனி சென்னை வருகை!!
வெள்ளி 5, மார்ச் 2021 11:27:26 AM (IST)
