» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

அடிப்படை வசதிகள் இல்லாத தூத்துக்குடி டோல்கேட்: கனிமொழி எம்.பி., நடவடிக்கை எடுப்பாரா?

புதன் 6, ஜூலை 2022 10:54:23 AM (IST)



தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் தொலைதூர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். இது தொடர்பாக கனிமொழி எம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க மட்டுமல்ல, பராமரிக்கவும் தனியார் தயவை  எதிர்பார்க்கும் அரசு, நான்கு வழிச்சாலையில் சுமார் 45 கிமீக்கு ஒரு  சுங்கச்சாவடியை (டோல்கேட்)  அமைத்து  வாகனதாரர்களை துன்புறுத்துகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் நான்குவழி, ஆறு  வழிச்சாலைகளாக மாற்றப்பட்டதன் முதன்மையான நோக்கமே  விபத்தில்லாத விரைவான பயணம், சொகுசான சுலப பயணம் தான். ஆனால், இந்த சாவடிகளால் சாவகாச பயணமே வாய்க்கிறது. டோல்கேட் பணியாளர்கள் வேறு தங்களை நோகடிப்பதாக வாகனதாரர்கள் புலம்புகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி எல்கையில் இருந்து 15 கிமீ தொலைவிற்கு அப்பால் டோல் கேட் அமைக்க வேண்டும் என்பது விதிமுறை, ஆனால் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் மாநகராட்சி எல்கையில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது. இதனால் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் உள்ள டோல்கேட்டில்  உள்ளூர் வண்டிகளுக்கு கட்டணம் கேட்டு தகராறு நடப்பது வழக்கமாகிறது. 



இதுதவிர டோல்கேட் வளாகத்தில் அதற்குரிய  அடிப்படை வசதிகள் அறவே இல்லை. கழிப்பறை பல மாதங்களாக மூடியே கிடக்கிறது. நீண்ட நெடுந்தூரத்திலிருந்து வரும் பணிகள், வாகன ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க கஷ்டமாக உள்ளதாக கூறுகின்றனர். வாகன ஓட்டிகள் நான்குவழிச்சாலையை பயன்படுத்த வரி கட்டியும் டோல்கேட் நிர்வாகத்தினர் எந்த வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. இது தொடர்பாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

SeenivasagamJul 17, 2022 - 09:23:12 AM | Posted IP 162.1*****

Court la case podunga

NameJul 12, 2022 - 04:33:17 AM | Posted IP 162.1*****

Yen minister mayor ku ithu theriyatha kanimoli than action yedukanuma oosila poravanga yarum itha kekka matangala ilai govt ku ithu theriyatha

kannanJul 6, 2022 - 11:59:04 AM | Posted IP 162.1*****

ஆசிரியரின் பதிவுக்கு நன்றிகள். தூத்துக்குடி அரசியல் கட்சி பிரமுகர்களின் பிடியில் தான் டோல்கள் இயங்கி வருகின்றன. அதனால் அதிகாரிகளும் கண்டு கொள்ள மாட்டார்கள். துறைமுகம் சாலையே இதற்கு சான்று.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory