» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செல்போன் கோபுரம் மீது ஏறி அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை மிரட்டல்: தென்காசியில் பரபரப்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:34:07 AM (IST)
தென்காசியில் செல்போன் கோபுரம் மீது ஏறி அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் மாடக்கண்ணுபட்டி பகுதியைச் சேர்ந்த ராமராஜா மகன் ராம்குமார் (27). இவர் செங்கோட்டையில் உள்ள அரசு பஸ் போக்குவரத்து கழகத்தில் தற்காலிக கண்டக்டராக பணியாற்றி வந்தார். தென்காசி ரெயில் நிலையம் அருகில் தாலுகா அலுவலக வளாக பகுதிக்கு நேற்று காலையில் ராம்குமார் வந்தார். அவர் திடீரென்று அங்குள்ள சுமார் 150 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி அமர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் தென்காசி போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையிலான வீரர்கள், போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ராம்குமார் கீழே இறங்கி வர சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் 2 பேர் செல்போன் கோபுரத்தில் ஏறி, ராம்குமாரை பத்திரமாக மீட்டு கீழே இறக்கி கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதில், அரசு பஸ் போக்குவரத்து கழகத்தில் தற்காலிக கண்டக்டராக ராம்குமார் பணியாற்றி வந்தார். அவருக்கு ஒரு அதிகாரி முறையாக பணி ஒதுக்கீடு செய்யவில்லை என்று மேல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். இதனால் அந்த அதிகாரி, ராம்குமாருக்கு தொடர்ந்து பணி ஒதுக்கீடு செய்ய மறுத்து வந்தார். இதுதொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராம்குமார் புகார் மனு அளித்தார். மேலும் ராம்குமாரின் அசல் ஓட்டுனர் உரிமத்தை போக்குவரத்து கழகத்தில் வைத்துக்கொண்டு தர மறுப்பதாகவும் புகார் தெரிவித்து இருந்தார்.
அந்த மனு மீது நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் பதில் அளித்த போக்குவரத்து கழக அதிகாரி, அசல் ஓட்டுனர் உரிமம் காணவில்லை என்றும், வட்டார போக்குவரத்து கழகம் மூலமாக பரிந்துரை கடிதம் அனுப்பி நகல் ஓட்டுனர் உரிமம் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் கூறிச்சென்றார். ஆனால் கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் அதிகாரி, ஓட்டுனர் உரிமம் வழங்காமலும், முறையாக பணி ஒதுக்கீடு செய்யாமலும், தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக ராம்குமார் தெரிவித்து வந்தார்.
இதனால் மனமுடைந்த அவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் நிறுவனத்தில் எந்த தவறுகளும் இல்லை : செந்தில் பாலாஜி விளக்கம்
வெள்ளி 14, மார்ச் 2025 5:22:16 PM (IST)

வைகை, பல்லவன் ரயில்களில் ஒரு முன்பதிவு பெட்டி பொதுப்பெட்டியாக மாற்றம்
வெள்ளி 14, மார்ச் 2025 12:08:45 PM (IST)

டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் : எடப்பாடி பழனிச்சாமி
வெள்ளி 14, மார்ச் 2025 11:56:12 AM (IST)

இருசக்கர மின் வாகனத்துக்கு ரூ.20 ஆயிரம் மானியம்: தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 10:58:29 AM (IST)

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இளம்பெண்ணை கொன்ற கணவர்: குடும்ப தகராறில் பயங்கரம்!
வெள்ளி 14, மார்ச் 2025 8:46:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 13, மார்ச் 2025 8:20:44 PM (IST)
