» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

வெள்ளி 19, ஜூலை 2024 10:02:26 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்த நல்லூர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான கரிவலம்வந்தநல்லூர் பெரியூர் கிழக்குத் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கருப்பசாமி (31) மற்றும் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு, வழிப்பறி ஆகிய குற்றங்களில் ஈடுபட்டு வந்த சங்கரன்கோவில் திரு.வி.க தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரின் மகன் சோலைவேல் (26) ஆகியோரை

தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோருக்கு பரிந்துரை செய்தார்.  இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் கருப்பசாமி, சோலைவேல் ஆகிய இருவரையும்  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors





Thoothukudi Business Directory