» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றாலத்தில் சீசன் ஜோர்.. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!

வெள்ளி 19, ஜூலை 2024 8:19:33 AM (IST)

குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் அருமையாக உள்ளது.  சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து பெய்த மழையினால் இங்குள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். ஆனாலும், மெயின் அருவியில் நீர்வரத்து சீராக இல்லாததால் அங்கு மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

நேற்று காலையில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் இல்லாமல் குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. இதமான சூழல் நிலவியது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.

மேலும் கடந்த 4 நாட்களுக்கு பிறகு மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ேநற்று குறைந்ததால் அதில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory