» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரட்டை ரயில் பாதைப்பணி: நெல்லையில் ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:28:59 AM (IST)

இரட்டை ரயில் பாதைப்பணி காரணமாக நெல்லையில் இன்றும், நாளையும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மற்றும் நெல்லை ரயில் நிலையங்களில் இரட்டை ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. விருதுநகர், நெல்லை ரயில் நிலையங்களுக்கு இணையான போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய நாட்களில் பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் (16732) ஆகியவை கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டை - நெல்லை சிறப்பு ரயில் (06684) மற்றும் நெல்லை- செங்கோட்டைச் சிறப்பு ரயில் (06687) ஆகியவை சேரன்மாதேவி - நெல்லை இடையே இன்றும், நாளையும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் (22628), திருவனந்தபுரத்திலிருந்து 40 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12.15 மணிக்கு புறப்படும். இந்த தகவல் தெற்கு ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory