» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சனி 3, ஜூன் 2023 12:12:32 PM (IST)

ரயில் விபத்தில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒடிசா கோர ரயில் விபத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் ஒடிசாவுக்கு செல்கின்றனர். அவர்கள் அங்கு இருந்து களப்பணி ஆற்றுவர்.மூன்று ரயில்கள் மோதி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொள்வதற்கும், மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தேன்.
ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவர், ஒண்டி வீரன் நினைவிடங்களில் ஆளுநர் மரியாதை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:34:28 PM (IST)

குமரி மாவட்டத்தில் அக்.2ம் தேதி கிராமசபைக் கூட்டம் ஆட்சியர் தகவல்!!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:32:44 PM (IST)

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு : முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 4:09:34 PM (IST)

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: 18 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:21:55 PM (IST)

பாரதத்தின் உந்து சக்தி விவசாயிகள்தான்: குற்றாலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
வியாழன் 28, செப்டம்பர் 2023 8:31:11 PM (IST)

திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:40:59 PM (IST)
