» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இதுவே என் பணியின் கடைசி நாள்! பேருந்தை கட்டியணைத்து அழுத ஓட்டுநர்!!

வியாழன் 1, ஜூன் 2023 8:24:54 PM (IST)



ஓய்வு பெறும் நாளில் பேருந்தை கட்டியணைத்து முத்தமிட்டு ஓய்வுபெற்ற ஓட்டுநரின் செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மதுரை அரசுப் போக்குவரத்து கழக திருப்பரங்குன்றம் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் பைக்காராவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் 30 ஆண்டுகளாக பணியாற்றிய ஓட்டுநர் முத்துப்பாண்டி 60 வயது நிரம்பிய நிலையில் பணி ஓய்வு பெற்றார். முத்துப்பாண்டி திருப்பரங்குன்றம் வழியாக அனுப்பானடி மற்றும் மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்து வழித்தட எண் 31 A பேருந்தை இயக்கினார்.

இன்று காலையுடன் அவருக்கு பணி முடிந்த நிலையில் தான் இத்தனை ஆண்டுகளாக ஓட்டி வந்த அரசு பேருந்தை இன்று காலை கடைசியாக இயக்கி ஓய்வு பெற்றார். அப்போது அதனை வணங்கி முத்தமிட்டு அரசுப் பேருந்தை கட்டித் தழுவினார். கண்ணீர் ததும்ப அரசுப் பேருந்து மூலம் தன் வாழ்வில் பெற்ற பயன்களை எடுத்துக் கூறி மகிழ்ச்சியுடன் பணி ஓய்வு பெறுவதாக அவர் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory