» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சீருடையில் வரும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு!
புதன் 31, மே 2023 12:47:25 PM (IST)
பள்ளிச் சீருடையில் வரும் மாணவர்களை பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய நடத்துனர்கள் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பயணத்திற்கு மாணவர்கள் தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அடையாள அட்டை தருவதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால், சீருடையில் வரும் மாணவர்களை பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், சீருடையில் வரும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










