» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை: பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:11:51 PM (IST)
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இதனால் பெண்வீட்டாருக்கு ஜெகன் மேல் கோபம் இருந்துள்ளது. இன்று(மார்ச் 21) மதியம் கே.ஆர்.பி., அணை அருகே தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் ஜெகன் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது ஜெகனை அவர் மனைவி சரண்யாவின் தந்தை தரப்பை சேர்ந்தவர்கள் வழிமறித்து நடுரோட்டில் வெட்டி கொன்றனர். சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு கத்தியுடன் பைக்கில் தப்பிச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.. சரோஜ்குமார் தாக்கூர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)











பொண்ணுMar 21, 2023 - 05:33:20 PM | Posted IP 162.1*****