» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை: அரசாணை
சனி 11, மார்ச் 2023 5:31:58 PM (IST)
தற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் நோக்கில் அபாயகரமான 6 பூச்சுக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடையை தமிழக அரசு விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் மோனோகு ரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், குளோர்பைரிஃபாஸ் உள்பட 6 பூச்சுக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்கொலை செய்து கொள்ளப் பயன்படுத்தப்படும் 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தமிழகத்தில் நிரந்தரத் தடை விதிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மக்கள் கருத்து
இதுMar 12, 2023 - 09:10:58 AM | Posted IP 162.1*****
வெளிநாட்டுக்காரன் தடை பண்ணிருப்பான்... அதை பாத்து நம்ம ஆளுங்க காப்பி அடிக்குறாங்க...
எங்கMar 12, 2023 - 09:11:38 AM | Posted IP 162.1*****