» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோயில்கள் பெயரிலான போலி இணைய தளங்களை முடக்க உயர்நீதிமன்றம் ஆணை
செவ்வாய் 31, ஜனவரி 2023 5:25:18 PM (IST)
கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனு, இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணன் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு: கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.