» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார்: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
செவ்வாய் 29, நவம்பர் 2022 11:58:46 AM (IST)
தமிழக ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
வேலூர் மாவட்டம் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசுகையில், தமிழகத்தில் நிதிநிலை கடும் நெருக்கடியில் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அதனை சமாளித்து வருகிறோம். நிதி நெருக்கடியிலிருந்து மீட்கும் பணிகள் படிப்படியாகத்தான் நடக்கும். அதுவரையில் கட்சியினர்ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியானது. தற்போதாவது மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம். அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியும். தமிழக ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார்.