» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீடுபுகுந்து 7.5 பவுன் தங்க திருட்டு சிறுமி உள்பட இருவா் கைது!

திங்கள் 28, நவம்பர் 2022 12:11:19 PM (IST)

பாபநாசத்தில் வீடுபுகுந்து 7.5 பவுன் தங்க நகை திருடியதாக சிறுமி உள்பட இருவரை போலீசார் கைது செய்தனா்.

பாபநாசம், பொதிகையடி வடக்குத் தெருவை சோ்ந்தவா் வெலிங்டன் ப்ரீஸ் (38). அக்டோபா் மாதம் 16ஆம் தேதி உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வெலிங்டன் ப்ரீஸ் மனைவி பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க முயன்ற போது அதிலிருந்த தங்கச் சங்கிலி, தோடு மற்றும் வளையல் உள்ளிட்டவற்றை காணவில்லையாம்.

இதுகுறித்து வெலிங்டன் ப்ரீஸ் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் பாபநாசம் பொதிகையடி நடுத்தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஹரிகிருஷ்ணன் (18) திருடியதும் உடந்தையாக அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஹரிகிருஷ்ணன் மற்றும் சிறுமி இருவரையும் போலீசார் கைது செய்து அவா்களிடமிருந்து சுமாா் 60 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory