» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவேகானந்த கேந்திரத்தில் ஸ்ரீராமானுஜ சாம்ராஜ்ய மகோத்ஸவம்: ஆளுநா் ரவி தொடக்கி வைத்தாா்!

வெள்ளி 25, நவம்பர் 2022 11:46:38 AM (IST)

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள சபா மண்டபத்தில் 2 நாள்கள் நடைபெறும் ஸ்ரீராமானுஜ சாம்ராஜ்ய மகோத்ஸவம் மகோத்ஸவத்தை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தொடக்கிவைத்தாா்.

மேல்கோட்டை ஸ்ரீயதுகிரி யதிராஜ மடத்தின் 41ஆவது பட்டம் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ யதுகிரி யதிராஜ நாராயண ராமானுஜ ஜீயா் சுவாமிகள் தலைமை வகித்தாா். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, விவேகானந்த கேந்திரத் தலைவா் ஏ. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாலையில் சுவாமி ராமானுஜா் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் பகவத் ராமானுஜா் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, 2ஆம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) ராமானுஜா் மாநாடு நடைபெறுகிறது. விவேகானந்த கேந்திரத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜா் சிலையை பிரதமா் நரேந்திர மோடி நண்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாகத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறாா். பின்னா், யதுகிரி யதிராஜ நாராயண ராமானுஜ ஜீயா் சுவாமிகளின் அருளுரை, பிரசாதம் வழங்குதல் நடைபெறும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory