» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலம் முன் முற்றுகை: மாதர் சங்கத்தினர் கைது!
வியாழன் 24, நவம்பர் 2022 12:11:31 PM (IST)
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாதர் சங்கத்தினர் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர். இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தை ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 24 பேரை போலீசார் கைது செய்தனர்.