» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பழுது : 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

புதன் 23, நவம்பர் 2022 3:47:49 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டர்பைன் பழுது காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரண்டாவது அணு உலையில் டர்பைன் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அணு உலையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலாவது அணு உலையில் மட்டும் தற்போது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory