» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை மாவட்ட பாஜக நிர்வாகிகள் கைது - அண்ணாமலை கண்டனம்
செவ்வாய் 22, நவம்பர் 2022 11:36:23 AM (IST)
நெல்லை மாவட்ட பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "வாயில்லா ஜீவனை அடைத்து வைத்து சித்ரவதை செய்த மாநகராட்சி ஊழியர்களை தட்டிக் கேட்ட, பாஜக நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட பொதுச் செயலாளர் டி.வி.சுரேஷ், பாளையங்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக பெண் தலைவர்களை கொச்சைப்படுத்திப் பேசிய திமுக பேச்சாளரை இன்று வரை காவல்துறை கைது செய்யாமல் இருப்பது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.