» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் மருத்துவமனையில் நர்ஸ் குத்திக் கொலை : நடத்தை சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல்!

செவ்வாய் 4, அக்டோபர் 2022 11:17:19 AM (IST)

கோவை தனியார் மருத்துவமனையில் நர்சை அவரது கணவர் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கோவை, ரத்தினபுரியை சேர்ந்தவர் நான்சி (27). குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் நர்ஸ் ஆக வேலை பார்த்து வந்தார். கணவர் வினோத் (32). தம்பதிக்கு, 8 வயதில் குழந்தை உள்ளது. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், 2 ஆண்டுக்கு முன் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்தனர். தன் மனைவிக்கு, வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கணவருக்கு சந்தேகம் இருந்தது.நேற்று மதியம், மனைவியை தேடி, அவர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு வினோத் சென்றார். 

அங்கிருந்த நான்சியிடம், கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. திடீரென வினோத், தன்னிடம் இருந்த கத்தியால் மனைவி நான்சியை சரமாரியாக குத்தினார்.நான்சி, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, அதே இடத்தில் உயிரிழந்தார்.அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், பாதுகாவலர்கள் இணைந்து கொலை செய்த வினோத்தை மடக்கிப்பிடித்தனர். அவர், ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory