» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 28, ஜூன் 2022 3:30:37 PM (IST)
ஆலங்குளம் அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு மாயமான்குறிச்சி காளியம்மன் கோவில், கிடாரக்குளம் அடைக்கல சாஸ்தா கோவில் மற்றும் அய்யனார்குளம் இசக்கியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உண்டியல்களை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த காணிக்கையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.