» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை!

செவ்வாய் 28, ஜூன் 2022 3:27:53 PM (IST)

ஆலங்குளம் அருகே, விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பிரபு. இவருடைய மனைவி செல்வராணி எஸ்தர் (வயது 50). இவர் ஆலங்குளத்தை அடுத்த கோவிலூற்றில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி செய்து வந்தார். இவருடைய மகள் வர்ஷினி சமீபத்தில் விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. 

மகளின் நினைவாகவே இருந்து வந்த செல்வராணி எஸ்தர் நேற்று  வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயக்கம் அடைந்துள்ளார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் வந்து அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்வராணி எஸ்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory