» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை!
செவ்வாய் 28, ஜூன் 2022 3:27:53 PM (IST)
ஆலங்குளம் அருகே, விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பிரபு. இவருடைய மனைவி செல்வராணி எஸ்தர் (வயது 50). இவர் ஆலங்குளத்தை அடுத்த கோவிலூற்றில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி செய்து வந்தார். இவருடைய மகள் வர்ஷினி சமீபத்தில் விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.
மகளின் நினைவாகவே இருந்து வந்த செல்வராணி எஸ்தர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயக்கம் அடைந்துள்ளார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் வந்து அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்வராணி எஸ்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துரோக சிந்தனை உடைய கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது: ஈபிஎஸ் மீது தினகரன் தாக்கு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:03:52 PM (IST)

தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 3:36:09 PM (IST)

ஒன்றினைந்து செயல்படுவோம்: சசிகலா, எடப்பாடி, தினகரனுக்கு ஒபிஎஸ் அழைப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:48:07 AM (IST)

இந்து மகாசபா தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: கார் கண்ணாடிகள் உடைப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:33:42 AM (IST)

கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் நிறுத்தம்: அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவிப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:19:56 AM (IST)

கொடுக்கல் வாங்கல் தகராறில் கட்டடத் தொழிலாளி அடித்து கொலைB: நெல்லையில் பயங்கரம்!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:17:10 AM (IST)
