» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு
வெள்ளி 20, மே 2022 11:16:39 AM (IST)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .
சென்னை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு திருப்புகழ் ஐஏஎஸ் கமிட்டி அறிக்கையின் படி ரூ.184 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கைளை பரிந்துரைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது .ஆலந்தூர், சோழிங்கநல்லூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .