» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து போராட்டம் : காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
புதன் 18, மே 2022 4:15:45 PM (IST)
ராஜீவ் கொலை வழக்கில், பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து நாளை அறப் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இதற்கிடையே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம்தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்ததாகவும், அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
அத்துடன், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். "காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியின் முக்கியமான இடங்களில் நின்று, வெள்ளை துணியை வாயில் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்துவார்கள். பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்துக்கொண்டு போராட்டம் நடத்துவோம். தமிழர்கள் என்பதற்காக விடுதலை செய்யவேண்டும் என்றால் அது முறையாகாது” என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தொடரும் சூறைக்காற்று: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
சனி 2, ஜூலை 2022 5:38:04 PM (IST)

நீட் எதிர்ப்பு பேச்சால் மாணவர்களை திசை திருப்ப கூடாது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
சனி 2, ஜூலை 2022 5:01:17 PM (IST)

நெல்லையில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
சனி 2, ஜூலை 2022 4:36:20 PM (IST)

வீண் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 2, ஜூலை 2022 4:03:20 PM (IST)

இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய இலட்சணமா? சீமான் அடுக்கடுக்கான கேள்விகள்
சனி 2, ஜூலை 2022 3:21:06 PM (IST)

கிராம நிர்வாக அலுவலர்கள் திருமண சான்று வழங்க கூடாது: வருவாய்த் துறை உத்தரவு!
சனி 2, ஜூலை 2022 12:36:41 PM (IST)
