» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்கிறது : அண்ணாமலை கருத்து!

புதன் 18, மே 2022 12:30:07 PM (IST)

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்வதாக மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னை  விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: "பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory