» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டல்: ரயில்வே ஊழியர் உள்பட 4 பேர் கைது!

செவ்வாய் 17, மே 2022 5:31:25 PM (IST)

நெல்லையில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய ரயில்வே ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் மாடலிங் தொழிலில் சேர்வதற்காக ஆசைப்பட்டு உள்ளார். இதை அறிந்த கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் சுகுமார் என்பவர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை காட்டியுள்ளார். பின்னர் சுகுமார் அந்த இளம்பெண்ணை தனக்கு சாதகமாக பயன்படுத்தியதோடு அவரை நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டி உள்ளார். தனது ஆசைக்கு இணங்க மறுத்தால் அந்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று அவர் மிரட்டியதாக தெரிகிறது. 

இதற்கிடையே சுகுமார் அந்த புகைப்படத்தை தனது உறவினர் அசோக்குமார் என்பவரது செல்போனுக்கு அனுப்பி உள்ளார். அதனை அசோக்குமாரின் மகன் ஸ்ரீராம் என்பவர் பார்த்துவிட்டு சக நண்பர் ஒருவருக்கு அந்த நிர்வாண படத்தை அனுப்பி உள்ளார்.உடனே 4 பேரும் அந்த இளம்பெண்ணை மிரட்டி உள்ளனர். இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி வழக்குப்பதிவு செய்து ரயில்வே கேட் கீப்பர் சுகுமார் உள்பட 4 பேரை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory