» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பப்ஜி மதன் ஜாமீன் மனு: போலீசாருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதன் 11, மே 2022 5:02:29 PM (IST)

பப்ஜி மதன் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க போலீசாருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசியபடி விளையாடியதாக வந்த புகாரின் பேரில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்  10 நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய போலீசாரு்கு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மதன் மீதான வழக்கில் கூறப்பட்டுள்ள சில சட்டப்பிரிவுகள் இந்த வழக்குக்கு பொருந்தாது எனவும் கடந்த 10 மாதங்களாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்க போலீஸ் தரப்பில் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்ட நிலையில் இறுதி வாய்ப்பாக ஒரு வார காலம் அவகாசம் வழங்கி விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory