» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ரூ.300 சிறப்பு படி- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய் 10, மே 2022 3:26:31 PM (IST)

இரவு பணிக்கு செல்லும் போலீசார், இன்ஸ்பெக்டர்களுக்கு சிறப்பு படி மாதம் ரூ.300 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் காவல் துறையில் 81 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேச்சு விவரம் வருமாறு: இரவு பணிக்கு செல்லும் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரை உள்ளவர்களுக்கு சிறப்பு படி மாதம் ரூ.300 வழங்கப்படும்.

வார விடுமுறை போலீசாருக்கு மட்டும் உள்ளது என்பதை இனிமேல் 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும். இதன்மூலம் 10,508 பேர் பயனடைவார்கள். மூன்றாவதாக இணைய தள சூதாட்டத்தில் ஈடுபட்டு தங்கள் உயிரை மாய்த்து கொள்வதற்கான காரணங்களை அறியும் பொருட்டு மாநில குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory