» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: கடுமையான போக்குவரத்து நெரிசல்
திங்கள் 9, மே 2022 10:22:32 AM (IST)
திற்பரப்பு அருவியில் விடுமுறை தினத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கு சுற்றுலா பயணிகள் வந்த காரின் கண்ணாடியை உடைத்து விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனது. புறக்காவல் நிலையம் இருந்தும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது இந்த.சுற்றுலா தளத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது