» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோடைகாலத்தில் குளிர்பானங்கள், மது, புகை தவிர்க்கவும் : தமிழக அரசு விழிப்புணர்வு
வெள்ளி 6, மே 2022 5:49:45 PM (IST)
கோடைகால வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய வழி முறைகளை தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி நிலவும் கோடைகாலத் தாக்கம் மற்றும் வெப்ப அலையிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். அதோடு மட்டுமின்றி உப்பு சர்க்கரை கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவைகளும் பருகினால் நீர்ச்சத்து இழப்பு மற்றும் சோர்வினை தவிர்க்கலாம்.
வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியில் செல்லாமலும், ஏனையோர் வெளியில் செல்லும் பட்சத்தில் கண்டிப்பாக காலணிகள் அணிந்து செல்ல வேண்டும். மேலும் செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல், புகை பிடித்தலையும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வை தென்காசி மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.
தமிழன்மே 7, 2022 - 09:15:04 AM | Posted IP 162.1*****