» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதியதில் வாலிபர் பலி: மற்றொருவர் படுகாயம்
வெள்ளி 21, ஜனவரி 2022 8:15:30 PM (IST)
வாசுதேவநல்லூர் அருகே பைக் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே சிந்தாமணிப் பேரி புதூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மல்லையா மகன் பெருமாள்ராஜ் (30). இவரும் அதே ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் குமார் (45) என்பவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை குமார் ஓட்டியுள்ளார். பைக் ஒத்தக்கடை விலக்கு பகுதியில் வந்தபோது சாலை மத்தியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் பெருமாள்ராஜ் சம்பவ இடத்தில் இறந்துவிட்டார்,
படுகாயம் அடைந்த குமார் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின் அவர் புளியங்குடி அரசு மருத்துவமனையிலும் அதன்பின் அவர் தென்காசி அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உதவி ஆய்வாளர் முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.