» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை : அமமுக தொண்டர்கள் முற்றுகை
ஞாயிறு 5, டிசம்பர் 2021 7:22:24 PM (IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த அ.தி.மு.க., அ.ம.மு.க., தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த போதும், அங்கிருந்து திரும்பும் போதும், அ.ம.மு.க., தொண்டர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அ.ம.மு.க., வினர் பழனிசாமிக்கு எதிராக கோஷம் போட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., அ.ம.மு.க., தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.