» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பல நாட்களாக தண்ணீர் சென்றும் நிரம்பாத அதிசய கிணறு : ஐ.ஐ.டி., குழு நேரில் ஆய்வு
சனி 4, டிசம்பர் 2021 5:00:11 PM (IST)
பல நாட்களாக தண்ணீர் சென்றும் நிரம்பாத அதிசய கிணறு குறித்து, சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அடுத்துள்ளது ஆயன்குளம். இக்கிராமத்திற்கு அருகில் நம்பியாறு அணையில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய் உள்ளது. பலத்த மழையால் நம்பியாறு அணை நிரம்பி விட்டது.அணையில் இருந்து வெளியேறும் நீர், வாய்க்கால் வாயிலாக ஆயன்குளத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் விழுகிறது.
இந்த கிணற்றில், பல நாட்களாக வாய்க்கால் தண்ணீர் சென்றும் நிரம்பாமல் நீரை உள்வாங்கிக் கொண்டே இருக்கிறது. தண்ணீர் நிரம்பாத அதிசயக் கிணறு என சுற்றுவட்டார மக்கள் பார்த்துச் செல்கின்றனர். சமீபத்தில், ஆட்சியர் விஷ்ணு இங்கு வந்து பார்வையிட்டார். அவரது பரிந்துரையை ஏற்று சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் வெங்கட்ரமணன், சீனிவாசன் தலைமையில் மூவர் ஆய்வு மேற்கொண்டனர்.இன்று இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொள்கின்றனர்.